Saturday 28 July 2012

மனசிலே மத்தாப்பு.....

நுரை ததும்பும் கடலலை நடுவே
அஸ்தமிக்கும் பகலவன் எதிர்த்து
எழுச்சி பயிலும்
மற்றொரு ஆதவனாய் நீ...!

நீர் அள்ளித் தெளிக்கும்
சிறகுகளின் படபடப்பாய்
உன் நினைவலைகள்
என்னுள் துடிதுடிப்பை தூவி செல்லும்...!

மாஞ்சோலை கிளிகளின்
கிள்ளை மொழி நெஞ்சை அள்ள
மத்தாப்பு சிதறலாய்
உன் கொஞ்சல் ஒலி
எதிர்பாட்டு இசைக்கிறது...!

சட்டென தெறிக்கும் சாரல் நடுவே
வெடவெடுக்கும் வெல்வெட் மலராய்
உன் ஒற்றை விரல் ஸ்பரிசம் ஒன்று
என்னை இம்சித்து சிரிக்கிறது...!

என் கட்டை விரல் ஒன்றை கேட்டுப்பார்...
கோலமிட்டு கோலமிட்டு
விரல் நகங்கள் தேய்ந்த கதை
ஓராயிரம் அது சொல்லும்...!

காத்திருக்க செய்தே காதலிக்க
வைக்கும் சாகசக்காரனாய் நீ...
என் ஒற்றை மனம் பதற
வெயிலில்லா கானகத்தில்
சுட்டெரித்து குளிரூட்டுகிறாய்...!



1 comment:

  1. /// காத்திருக்க செய்தே காதலிக்க
    வைக்கும் சாகசக்காரனாய் நீ...
    என் ஒற்றை மனம் பதற
    வெயிலில்லா கானகத்தில்
    சுட்டெரித்து குளிரூட்டுகிறாய்...! ///

    அனுபவ வரிகள்... அருமை...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete