Monday 9 July 2012

தென்றலின் வெம்மை....!


இதமான தென்றல் வீசிடும்
கடற்கரை சாரலிலே
உன் மார்போடு நான்...!

அணைக்க துடிக்கும் கரங்கள்
ஏனோ இன்னும் என்னை
சிறைபடுத்தாமல் வெறித்தே
எங்கோ நோக்குகிறது...!

நீ அணைக்க போகும் தருணம்
நொடி பொழுதும் வீணாகலாகாதென
கண் மூடி நான் காத்தே கிடக்கிறேன்...!

நெஞ்சம் நிறைத்த கனவாய்
நீ என் உயிர் வருடி
கண்கள் வழி குறும்பு பார்வை
பார்த்து என் வெட்கம் ரசிக்கிறாய்...!

உன் ஆண்மை திமிரில்
இதமாய் குளிர் காயும் ஆசையில்
குருஞ்சிரிப்பாய் உன்னில்
லயித்தே போகிறேன்...!

நின்று விடாதா இத்தருணம்?
ஏக்கம் சேர்த்து நேரமும்
கூடவே கரைகிறது...
விடுபட விரும்பா சிறைப்பறவையாய்
நான் மட்டும் இன்னும் உனக்குள்...!

2 comments: