Thursday 8 March 2012

இப்படிக்கு காதல்...

உன்னில் நான்
உணர்ந்து கொண்டது
காதல் தான்...
ஆம்...
என் தந்தையின் காதலை
உன்னில் உணர்ந்தேன்
என் தாயின் காதலை
உன்னில் சுவாசித்தேன்
உன் தோள் சாயும் போது
என்னை உணர்ந்தேன்
உன் மார்பில் தூங்கும் போது
என்னை மறந்தேன்
வாழ்வின் இறுதி வரை
உன் காதல் வேண்டும்
நம் சந்ததியினரும் நம் காதலை
காதலிக்க வேண்டும்
அவர்களும் காதலர்களாய்,
கையோடு கை கோர்த்து
அடுத்த தலைமுறைக்கு
நம் காதலை சுமந்து செல்லட்டும்
என் தோழனே.....

7 comments:

  1. அருமை....... நல்லா எழுத ஆரம்பிச்சுட்டிங்க . தொடர்ந்து எழுதுங்க .

    ReplyDelete
  2. அருமை.

    அடுத்த தலைமுறையைத் தேடி ,
    நானும்.

    ஒன்றிழந்து ஒன்று கண்ட
    கன்றுடைய குரலுடனே
    நன்று நன்றி என்று சொல்வேன்
    கொஞ்சு தமிழ்க் கவிதை கண்டு.!

    ReplyDelete
  3. //வாழ்வின் இறுதி வரை
    உன் காதல் வேண்டும்//
    உங்கள் கவிதைகளை வாசித்தேன் அனைத்தையும் மிக நன்றாக யாத்தீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. ஆழமான வார்த்தைகளடங்கிய கவிதைகளை இன்னும் எதிர்ப்பார்த்த நட்புத்தோழன் நான்,.!
    வாழ்த்துக்கள் தோழியே..!

    ReplyDelete
  5. உன்னில் நான்
    உணர்ந்து கொண்டது
    காதல் தான்...
    ஆம்...
    என் தந்தையின் காதலை
    உன்னில் உணர்ந்தேன்
    என் தாயின் காதலை
    உன்னில் சுவாசித்தேன்
    ஆனால்.......தவிர்க்கமுடியா தடை(?) தடுத்து......
    இப்போது பிரிவில், வெளியில் மகிழ்ச்சிவேடம் புனைந்து உள்ளுக்குள்........????? :(

    ReplyDelete