Friday 15 May 2015

காதல் பொழுது...




சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு கெத்து. என்னோட அம்மா அப்பா மாதிரி யாரும் லவ் பண்ண முடியாதுன்னு. அதுமட்டுமில்லாம சுத்துறது பூராவும் பசங்க கூட. இப்படி சுத்தி சுத்தியே பசங்கனா சைட் அடிக்கணும்ங்குற தியரியே மறந்து போச்சு.

என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஒரு குட்டிச் சுவர் மேல உக்காந்துட்டு வர்ற போற புள்ளைங்கள எல்லாம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க. நானும் அவங்க கூட உக்காந்துட்டு ஹே அந்தப் பொண்ண பாரு, இந்த பொண்ணப் பாருன்னு லீட் எடுத்து குடுத்துட்டு இருப்பேன். நாம பசங்க சைட் அடிக்குறத ரசிக்கலாம், ஆனா ஒரு பையன் கூட நம்மள திரும்பிப் பாத்துரக் கூடாதுன்னு நினைப்பேன்.

வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் எப்பவுமே வந்துகிட்டே தான் இருக்கும். ஒரு கட்டத்துல காதல்ங்குற வார்த்தையே தப்புன்னு வெறுத்து ஓடியிருக்கேன். நானும் காதலிக்குறேன்னு பின்னால சுத்தியிருக்கேன். ஆனா அதெல்லாம் காதலே இல்லன்னு உணர்ந்தப்ப காதல்ங்குற வார்த்தை மேலயே ஒரு வெறுப்பு வந்துருக்கு. காதலே தப்புங்குறப்ப கல்யாண வாழ்க்கை மட்டும் எப்படி நிலைக்கப் போகுது? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உடலும் மனமும் சோர்ந்த நேரத்துல கூட அவர் என்னோட நல்ல நண்பனா தொடர்ந்துருக்கார்.

அவர்னா அவர் தான்... யாருன்னு எல்லாம் கேக்கக் கூடாது.

பொதுவா நாங்க ரெண்டு பேரும் விடிய விடிய பேசிகிட்டே இருப்போம். ரெண்டு பேருக்கும் பல பல காயங்கள்னால தூக்கம் வர்றதில்ல. அப்படி தான் அன்னிக்கி நான் பத்து மணிக்கு கால் பண்ணினேன், எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருக்கு, ஆனா இப்ப பிரெண்ட்ஸ் பார்ட்டி வச்சிருக்காங்க, நான் அங்கப் போறேன், தூங்கிறாத, வந்து கூப்பிடுவேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.

சரி, என்னமோ சொல்ல வர்றார்ன்னு நானும் வெய்ட் பண்ணினேன். அஞ்சே நிமிசத்துல அவர் கிட்ட இருந்து கால். நீ வெய்ட் பண்ணுவன்னு கஷ்டமா இருந்துச்சு, அதான் நான் பார்ட்டிக்கு போகலன்னு சொன்னார்.

வழக்கமா என் கிட்ட பேசணும்னா மொட்டை மாடிக்கு வந்துருவார். இன்னிக்கி நிலா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னார். நிலா மறைக்கும் தென்னங்கீற்றுகள் அழகோ அழகுன்னு சொன்னார். கொஞ்ச நேரம் வழக்கமான மொக்கைகள், பாட்டு எல்லாம் பாடிட்டு இருந்தோம். அப்போ பேச்சு என்னோட பிரெண்ட்ஸ் பத்தி போச்சு.

எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க, ஆனா க்ளோஸ் பிரெண்ட்ன்னு யாரும் கிடையாது. எனக்கு அவங்க கஷ்டம் எல்லாம் தெரியும், அப்ப எல்லாம் அவங்க கூட இருந்துருக்கேன், ஆனா யார் கிட்டயும் என் கஷ்டத்த பகிர்ந்துக்குறது இல்லன்னு சொன்னேன். அப்ப நான் யாருன்னு கேட்டார். பிரெண்ட்ன்னு சொன்னேன். நான் உன் க்ளோஸ் பிரெண்ட் இல்லையா, நீ எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணுவன்னு எதிர்பார்த்தேன்னு சொன்னார். சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டு போய்ட்டார்.

திருப்பி கூப்பிட்டா என்னை பிளாக் பண்ணி வச்சுட்டார். கால் போகவே இல்ல. சரி, நாம எதுவும் தப்பா சொல்லிட்டோமோன்னு ஒரே பதற்றம். அவர் மனச நாம காயப்படுத்திட்டோமோன்னு அழுகை வேற வந்துடுச்சு. கொஞ்ச நேரத்துல திருப்பி கூப்பிட்டார். இன்னியோட உன் கூட பேசுறத விட்டுடணும்னு தான் நினச்சேன், ஆனா முடியல, இனி இப்படி ஒரு வார்த்த பேசாதன்னு சொன்னார். யாருமே இல்லாம தனியா வீட்டை விட்டு வெளில வந்தப்ப உன் கிட்ட மட்டும் தான் என்னோட இருப்பிடத்த சொன்னேன், நீ மட்டும் தான் கூட இருந்தன்னு சொல்லிட்டே வந்தவர், உனக்கு இப்ப என்ன பிரச்சனை, செத்துப் போவ, அவ்வளவு தானேன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் தயங்கி, சரி, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நிறுத்தினார்.

எனக்கு கொஞ்சம் வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. என்னடா இது, ஒரு வேளை ஐ லவ் யூ சொல்லிடுவாரோன்னு. அவர் உடனே பக்கத்துல தண்ணி இருக்கானு கேட்டார். இருக்குன்னு சொன்னேன். எடுத்து குடின்னார். குடிச்சேன். இப்ப பதற்றம் போய்ட்டா, போய் தூங்கு, குட் நைட் ன்னு சொல்லிட்டார்.

நான் ஷாக்காகி, அப்புறம் நார்மலுக்கு வந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். உடனே, இப்ப ரிலாக்ஸ் ஆகிட்டியா, எல்லாத்தையும் விடு, எனக்கு இந்த லவ் மேல எல்லாம் சுத்த நம்பிக்கை இல்ல, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு பட்டுன்னு கேட்டுட்டார். மறுபடியும், ஷாக், நடுக்கத்துல கண் எல்லாம் கலங்கி, அழ ஆரம்பிச்சுட்டேன். எனக்கு லவ் எல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேன். நானும் லவ் பண்றியான்னு கேக்கலையே, கல்யாணம் பண்ணிக்றியான்னு தானே கேட்டேன்னார். இதுக்கு ஓகேனா சொல்லு, நான் தொடர்ந்து பேசுறேன், இல்லனா என்னால நடிக்க முடியாது, இதோட நம்ம பழக்கத்த முடிச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்.

பத்து நிமிஷம் நான் எதுவுமே சொல்லல. அப்புறம் அவரே சாரி, உன்னை கட்டாயப் படுத்துறேன்ல, நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும், நீ என் பிரெண்டாவே இரு, போய் தூங்குன்னு சொல்லிட்டார். பேசவே மாட்டாரோன்னு நினச்சேன், ஆனா அடுத்த நாள்ல இருந்து சாப்ட்டியா, தூங்குனியான்னு ஒரே அக்கறை. என்ன இது? ஏன் இப்படி தொடர்ந்து கால் பண்றீங்கன்னு கேட்டா, உனக்கு தான் நான் பிரெண்ட், ஆனா எனக்கு நீ அப்படி இல்ல, நான் இப்படி தான் கேப்பேன்ன்னு ஒரே கலாட்டா...

ரெண்டு நாளுக்கு அப்புறம் நானும் சரி சொன்னேன். காரணம், அவர்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த காதல் தான் பிடிக்காம இருந்துச்சு...

நிறைய சண்டை வரும். ரொம்ப கோபத்துல திட்டுவார், நான் பொறுமையா பின்னால போவேன், இப்ப நான் கோபத்துல கத்துறேன், அவர் பொறுமையா பின்னால வர்றார். இப்படியே நாட்கள் ஓடிட்டு இருக்கு. இன்னும் எத்தனை நாளோ, இல்ல வருசமோ ஆகும்னு தெரியாது, ரெண்டு பேருக்குமே தனித் தனி லட்சியங்கள்ன்னு இருந்தாலும், எங்களோட குடும்பம்னு ஒண்ணு இருக்கு. எக்காரணம் கொண்டும் எங்களால குடும்பத்துல யாருக்கும் சின்ன மன வருத்தம் கூட வந்துடக் கூடாதுன்னு நினைக்குறோம். காதலா, குடும்பமான்னு பாத்தா, ரெண்டுமே தேவையா இருக்கு. அதனால படிப்படியா ஸ்டெப் எடுத்து வச்சுட்டு இருக்கோம்.

அப்புறம் இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேட்டா பதிலும் கிடைக்காது. எல்லாம் உங்கள் அனுமானத்துக்கே விட்டுடுறேன்.

ஏன்னா, சில விஷயங்கள் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.... அத இப்படியாவது வாழ்ந்து பாத்துடணும்னு ஆசை இருக்கும். எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. அதோட என்னோட ப்ளாக் வாசிக்குரவங்களுக்கும் நான் ஒரு சுவாரசியத்த குடுத்தே ஆகணுமே... அதனால இது நடந்த சம்பவமான்னு கேட்டா அத மட்டும் சொல்ல மாட்டேன். டொட்டடொயிங்....



.

10 comments:

  1. Replies
    1. ஹ்ம்ம்.... தேங்க்ஸ்

      Delete
  2. உண்மையோ பொய்யோ படிக்க சுகமாகவும், சுவாரசியமாயும் இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அதான வேணும்

      Delete
  3. ரைட்டு... அப்படியே இருங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அப்படியே ஆகட்டும் அண்ணா

      Delete
  4. Sounds very personal. It is a touchy subject and so I reserve my comments at this time, GD! :)

    ReplyDelete
    Replies
    1. ஹஹா இது நல்லப் புள்ளைக்கு அடையாளம்

      Delete
  5. Endrum santhoshathutan iruka vazhuthugal....:)

    ReplyDelete
  6. அவர் ரொம்ப நல்லப்பையன் போல.. என்னை மாதிரி.

    ReplyDelete